யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம்

யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம்

யாழில் உள்ள பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஆனந்தன் முகுந்தன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம் | Young Family Man Death Hanged In Jaffna

மனவிரக்தியால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் இன்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.