யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனுக்கு காதலால் நேர்ந்த கதி

யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனுக்கு காதலால் நேர்ந்த கதி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற தகராற்றில் கை துண்டாடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

இந்த சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனின் கையே மேற்படி துண்டாடப்பட்டுள்ளது.

யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனுக்கு காதலால் நேர்ந்த கதி | A Young Man S Hand Was Severed Divorce Kilinochchiகாதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

காயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன