நாட்டின் காலநிலை மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் காலநிலை மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி (Galle), மாத்தறை (Matara), கண்டி (kandy) மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மாத்தளைமாவட்டத்தில் (Matale) பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.