யாழ். சாவக்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

யாழ். சாவக்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் இன்றையதினம் (05-07-2024) அவதானிப்பு விஜயம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி, பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த களவிஜயம் முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சாவக்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! | Chavakachcheri Hospital Sri Lanka Human Rights

மேலும், குறிப்பாக சமூக பொருளாதார சமூக உரிமைகளில் ஒன்றான சுகாதார உரிமைகளை மக்கள் அனுபவிப்பதை, அணுகுவதை உறுதி செய்யுமுகமாக இந்த கள விஜயம் அமைந்திருந்தது.

குறிப்பாக இன்றையதினர் விடுதிகளில் நோயாளர்கள் எவரும் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டது.

யாழ். சாவக்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! | Chavakachcheri Hospital Sri Lanka Human Rights

இன்றைய கள விஜயத்தில் பெற்றுக்கொண்ட பல அவதானிப்புகள் தொடர்பில் எதிர்வரும் 08.07.2024 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பளார், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றை எமது அலுவலகத்தில் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.