யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து... 30-க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த நிலை

யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து... 30-க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த நிலை

யாழில் இருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்தில் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து... 30-க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த நிலை | Accident Bus Traveling From Jaffna To Kataragama

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து... 30-க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த நிலை | Accident Bus Traveling From Jaffna To Kataragama

விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.