கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஹொங்கொங் நோக்கி பறந்த சீன அதிகாரிகள்..!
சீனாவில் இருந்து சுகாதார பிரிவின் 7 அதிகாரிகள் இன்று ஹொங்கொங் நோக்கி பயணமானார்கள்.
ஹொங்கொங்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக குறித்த 7 அதிகாரிகளும் அங்கு பயணித்துள்ளனர்.
ஹொங்கொங் அரசு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சீன அதிகாரிகள் தவிர்ந்த மேலும் 60 பேர் ஹொங்கொங் நோக்கி பயணமாகவுள்ளனர்.