ஈரானின் அரசாங்கம் கூறுவதை விட கொவிட்-19 உயிரிழப்பு மூன்று மடங்கு அதிகம்!

ஈரானின் அரசாங்கம் கூறுவதை விட கொவிட்-19 உயிரிழப்பு மூன்று மடங்கு அதிகம்!

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஈரானின் அரசாங்கம் கூறுவதை விட மூன்று மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 அறிகுறிகளுடன் ஜூலை 20ஆம் திகதி வரை கிட்டத்தட்ட 42,000பேர் உயிரிழந்துவிட்டதாக அரசாங்கத்தின் சொந்த பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சுகாதார அமைச்சு தரவுகள் 14,405பேர் உயிரிழந்ததாக கூறுகின்றது.

இதேபோல, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிப்பை உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

458,024பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்ற போதிலும், சுகாதார அமைச்சு தரவுகள் 278,827பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன.

மருத்துவ பதிவுகளின்படி, கொவிட்-19 தொற்றினால் ஈரானில் முதல் உயிரிழப்பு ஜனவரி 22ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது.

ஆனால், கொரோனா வைரஸின் முதல் உத்தியோகபூர்வ தொற்று அங்கு தெரிவிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே இது பதிவாகியுள்ளது.

ஈரானில் தற்போது 309,437பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 17,190பேர் உயிரிழந்துள்ளனர்.