
கொவிட்-19 விதிமுறைகள் கடைகளில் பின்பற்றப்படுகின்றதா? களத்தில் சோதிக்கும் போலந்து அதிகாரிகள்
போலந்தில் உள்ள கடைகளில் மக்கள் வாய் மற்றும் மூக்கை மூடி முகக்கவசம் அணிந்து விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை சரிபார்க்க, போலந்து அரசு புதிய நடவடிக்கையினை எடுத்துள்ளது.
அதாவது, இவ்வாறு மக்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை அவதானிக்க பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதனை போலந்தின் சுகாதார அமைச்சர் லூகாஸ் சுமோவ்ஸ்கி, பொது வானொலியொன்றுக்கு அளித்த செவ்வியில் உறுதிப்படுத்தினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வாரம் நாங்கள் கடைகளில் சோதனைகளைத் தொடங்குகிறோம் (வாடிக்கையாளர்கள் முகக்கவசங்களை அணிந்திருக்கிறார்களா, ஊழியர்கள் முகக்கவசங்கள் அணிந்திருக்கிறார்களா என்பதைப் பார்க்க)’ என கூறினார்.
போலந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 47,469பேர் பாதிக்கப்பட்டதோடு, 1,732பேர் உயிரிழந்துள்ளனர்.