தேங்காய் பறிக்க சென்றவர் மீது துப்பாக்கி சூடு

தேங்காய் பறிக்க சென்றவர் மீது துப்பாக்கி சூடு

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தேங்காய் பறிக்க சென்றவர் மீது துப்பாக்கி சூடு | Shots Fired At Man Who Went To Pluck Coconuts

நேற்று (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில் தேங்காய் பறிக்க அனுமதியின்றி தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக தோட்ட காவலாளியால் குறித்த  நபர்  சுடப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 துளை துப்பாக்கியுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்திய மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரை குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.