
யாழில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை
இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் நாளையமறுதினம்(13.03.2025) காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை யாழ் மாவட்ட செயலாளர் தலைமையில் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
தேவையானவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகை தந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ் மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.