நாட்டில் வேகமாக பரவும் சிக்குன்குனியா : எச்சரிக்கும் மருத்துவர்கள்

நாட்டில் வேகமாக பரவும் சிக்குன்குனியா : எச்சரிக்கும் மருத்துவர்கள்

இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா (Chikungunya) வேகமாகப் பரவி வருவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள மருத்துவ ஆலோசகர் அச்சலா பாலசூரிய, சிக்குன்குனியா என்பது தொற்றுள்ள ஏடிஸ் நுளம்புகள், ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகியவை கடித்தால் பரவுகிறது என்று கூறியுள்ளார்.

சுமார் 4 முதல் 7 நாட்கள் அடைகாக்கும் காலத்திற்குப் பிறகு, இந்த தொற்றுள்ள நுளம்புகள் வைரஸை பரப்பக்கூடும்.

நாட்டில் வேகமாக பரவும் சிக்குன்குனியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் | Chikungunya Spreading Rapidly Doctors Warn

இந்த நுளம்புகள் அதிகாலை மற்றும் பிற்பகல் நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும், மேலும் அவை பூந்தொட்டிகள், டயர்கள், வாளிகள் மற்றும் அடைபட்ட வடிகால் போன்ற கொள்கலன்களில் உள்ள தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன.

இந்த நோய் ஒருவருக்கு நேரடியாகப் பரவுவதில்லை - நுளம்பு கடித்தால் மட்டுமே பரவுகிறது. 

இதன் பாதிப்பாக, மூட்டு வலி. குறைந்தது ஒரு மாதமாவது நீடிக்கும், என்று மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

நோயின் முக்கிய அறிகுறிகளில் திடீரென அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் தோல் வெடிப்புகள் ஆகியவை அடங்கும்.

பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்தாலும், மூட்டு வலி சில சமயங்களில் மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீடிக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு இது பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வேகமாக பரவும் சிக்குன்குனியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் | Chikungunya Spreading Rapidly Doctors Warn

நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவது மட்டுமே, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ள வழி என்று மருத்துவ ஆலோசகர் அச்சலா பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  இலங்கை முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதன் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.