யாழில் முச்சக்கர வண்டி மோதி முதியவர் ஒரு பலி !

யாழில் முச்சக்கர வண்டி மோதி முதியவர் ஒரு பலி !

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

அன்ரனி தேவதாஸ் (வயது 60) என்ற நபரொருவரே இவ்வாறு உயிழந்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 24ஆம் திகதி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அவர்மீது முச்சக்கர வண்டி மோதிய நிலையில், பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் 25 ஆம் திகதி அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.  

யாழில் முச்சக்கர வண்டி மோதி முதியவர் ஒரு பலி ! | One Killed In Three Wheeler Collision In Jaffna

ஆகையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (26) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.