வாக்களிக்கச் சென்ற பெண் திடீரென உயிரிழப்பு

வாக்களிக்கச் சென்ற பெண் திடீரென உயிரிழப்பு

மினுவாங்கொடை - அலுதபொலவில் உள்ள வலகம்பா மகா வித்தியாலத்தில் வாக்களிக்கச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் 69 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மினுவங்கொட அலுதபபொல பகுதியில் வசிக்கும் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.