மஹர சிறை மோதல் - கைதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது

மஹர சிறை மோதல் - கைதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது

மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இன்று (03) பிற்பகல் விசேட சட்ட வைத்தியக் குழுவினால் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் இடம்பெற்றது. 

இதன்போது, அதிகளவில் இரத்தம் வெளியேறியமையே மரணத்திற்கான காரணம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. 

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், குறித்த கைதியின் சடலம் இன்று (03) மாலை வத்தளைப் பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.