வெளியானது முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

வெளியானது முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகர வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 2260 வாக்குகள் - 9 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1397 வாக்குகள் - 5 ஆசனங்கள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 795 வாக்குகள் - 3 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 265 வாக்குகள் - 1 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் - 1 ஆசனங்கள்வெளியானது முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் | Local Government Election Result 2025 Hambantota