யாழில் திடீரென மரணித்த தவில் வித்துவான் - பரிசோதனைகளில் வெளியான தகவல்

யாழில் திடீரென மரணித்த தவில் வித்துவான் - பரிசோதனைகளில் வெளியான தகவல்

யாழில், கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டை - கூளாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன்(வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் திடீரென மரணித்த தவில் வித்துவான் - பரிசோதனைகளில் வெளியான தகவல் | Thavil Artist Dies Suddenly In Jaffna

இவருக்கு கடந்த 17ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம்(19) உயிரிழந்துள்ளார்.

யாழில் திடீரென மரணித்த தவில் வித்துவான் - பரிசோதனைகளில் வெளியான தகவல் | Thavil Artist Dies Suddenly In Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

கிருமித்தொற்றினால் உடற்கூறுகள் செயலிழந்ததால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.