
யாழில் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூன்று டிப்பர்கள்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர்கள் காவல்துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகாமையில் வைத்து குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (24) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும், மூன்று டிப்பர்களுடன் சாவகச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.