
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிபர்களுக்கு கல்வியமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்
பாடசாலைகளில் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி, உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்குள் அதிக எண்ணிக்கையிலான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் பிள்ளைகள் துன்புறுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிபர்கள் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு மாவட்ட அதிபர்களை தெளிவூட்டும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.