
அநுர அரசுக்கு நெருக்கடி ஆரம்பம் : நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்
அண்மையில் தொடருந்து திணைக்கள ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் பேச்சுவார்த்தை மூலம் அந்த வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டது.
தற்போது அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் (PTOU) வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் நிரோஷன தெரிவித்தார்.
ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் நடத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.