
தமிழர் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற கார்.. பாதசாரி பரிதாப மரணம்
பெரியநீலாவணை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் ஒன்று இன்று காலை பாதசாரி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்த நபர் பொலிஸ் அதிகாரிகளால் கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்த பாதசாரியின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, சடலம் கல்முனை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.