கொழும்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கொழும்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கொழும்பு மாவட்டம் கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாகொட பிரதேசத்தில் உள்ள வாவிக்கு அருகில் இருந்து இன்று (28) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு | Body Of A Man Recovered In Colombo

சடலமானது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.