நாட்டில் களமிறங்கப்பட்டுள்ள சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு - கதிகலங்கும் குற்றவாளிகள்

நாட்டில் களமிறங்கப்பட்டுள்ள சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு - கதிகலங்கும் குற்றவாளிகள்

நாட்டில் துப்பாக்கி சூடு உள்ளிட்ட குற்றங்களை செய்து தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு ஆயுதங்கள் மற்றும் விரைவான அணுகலுடன் கூடிய சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த குழு தென் மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் தலைமையில் செயல்படுகிறது.

இதில் தங்காலை, மாத்தறை பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 15 நெடுஞ்சாலை மோட்டார் சைக்கிள்கள் அடங்கும். மேலும் சுமார் 46 அதிகாரிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் களமிறங்கப்பட்டுள்ள சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு - கதிகலங்கும் குற்றவாளிகள் | Strong Motorcycle Squadron To Deployed Quickly

சிறப்பு மோட்டார் சைக்கிள் குழுவின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் நாட்டின் குற்ற செயல்கள் அதிகமாக இடம்பெறும் பகுதிகளில் இதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.