கொழும்பில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்: நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியேற்றம்

கொழும்பில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்: நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியேற்றம்

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு வீசிய கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை வரையிலான வீதி, கொழும்பு-காலி வீதியின் கிராண்ட்பாஸை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதன் காரணமாக கிராண்ட்பாஸில் உள்ள சென் ஜோசப் வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அருகிலிருந்த 6 வீடுகள் சேதமடைந்தன.

இதன் போது குறித்த வீடுகளில் இருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

கொழும்பில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்: நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியேற்றம் | Trees Fall Due To Strong Winds In ColomboGalleryGalleryGallery