ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து மாணவனை தள்ளிவிட்ட நபர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து மாணவனை தள்ளிவிட்ட நபர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

16 வயது பாடசாலை மாணவனை, ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து தள்ளிவிட்டு, அவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ், சந்தேக நபரை கொலைக் குற்றவாளி என அறிவித்து, நேற்று அவருக்கு மரண தண்டனையை விதித்துள்ளார்.

ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து மாணவனை தள்ளிவிட்ட நபர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Schoolboy Death Tricycle Driver Sentenced To Death

2014 ஏப்ரல் 9 ஆம் திகதியன்று, பசறை பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட ரத்நாயக்க முதியான்செலாகே ஹீன்பண்டா என்பவரே, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சம்பவத்தின்போது, மாணவரான பிரான்சிஸ் சுதர்சன் என்பவரை, ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து தள்ளிவிட்டதால் அவர் படுகாயமடைந்தார்.

ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து மாணவனை தள்ளிவிட்ட நபர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Schoolboy Death Tricycle Driver Sentenced To Death

பின்னர் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அங்கு உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தின்போது குற்றம் சுமத்தப்பட்டவர் மதுபோதையில் இருந்தார் என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.