
யாழில் திடீரென உயிரிழந்த ஆண்: வெளியான காரணம்
யாழில் இளம் ஆணொருவர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் சங்கானை சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றார்.
இந்தநிலையில், குறித்த நபர் நேற்று முன் தினம் (28) உறக்கத்துக்கு சென்றுள்ளார்.
அவர் அதிகாலையில், வியாபாரம் செய்கின்றவர் என்பதால் அவரை வியாபாரத்துக்கு அனுப்புவதற்கு உறவினர்கள் நேற்று (28) காலை எழுப்ப முற்பட்ட வேளை அசைவற்று காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.