2024 - புலமைப்பரிசில் பரீட்சை எழுதியவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

2024 - புலமைப்பரிசில் பரீட்சை எழுதியவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

ஆறாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு ஆறாம் தரத்திற்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், குறித்த மாணவர்களை உள்வாங்குவதற்கான முதல் சுற்று மேன்முறையீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பெறுபேறுகளை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 - புலமைப்பரிசில் பரீட்சை எழுதியவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு | Grade 6 Admissions Appeal Results Moe Announcement

மேலும்,மேன்முறையீடு மூலம் பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான விடயங்கள், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரால் மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.