நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள்: தொடரும் சீரற்ற வானிலை!

நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள்: தொடரும் சீரற்ற வானிலை!

நிலவும் பாதகமான வானிலை காரணமாக நாடு முழுவதும் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 1,321 பேர் கனமழை , பலத்த காற்று மற்றும் மின்னலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள்: தொடரும் சீரற்ற வானிலை! | 29 015 Power Outages Reported Across The Country

கொழும்பு மற்றும் ஹோமாகம பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த பகுதியில் 03 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 239 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள்: தொடரும் சீரற்ற வானிலை! | 29 015 Power Outages Reported Across The Country

இதற்கிடையில், நுவரெலியா - சோமர்செட் - லேண்டல் வத்த பகுதியில் நிலச்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.