பேருந்து சில்லில் சிக்கி 3 வயது சிறுவன் பலி

பேருந்து சில்லில் சிக்கி 3 வயது சிறுவன் பலி

பாணந்துறையில் பேருந்தின் சில்லில் சிக்கி மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (30) பிற்பகல் 1:30 மணியளவில் பாணந்துறை - ருக்கஹ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாணந்துறை, அருக்கொட, பொன்சேகா மாவத்தையைச் சேர்ந்த நெதுச தத்சர பெர்னாண்டோ என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சித்தியின் மகளுக்கு காது குத்தும் நிகழ்விற்காக மாலமுல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு மேற்படி சிறுவன், ஒரு பெண் குழந்தை மற்றும் பத்து வயது சிறுவன் ஆகியோர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.

பேருந்து சில்லில் சிக்கி 3 வயது சிறுவன் பலி | Boy Dies After Being Crushed By Bus

செல்லும் வழியில் பயணிகள் இறங்குவதற்காக பாணந்துறையின் ருக்கஹ பகுதியில் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டிக்கு பின்னால் வந்த ஒரு லொறி ஒன்று பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது.

அந்த நேரத்தில், பேருந்தின் முன்னால் வந்த முச்சக்கர வண்டி சாரதி வண்டியின் பிரேக்கை இயக்கியுள்ளார்.

இதன்போது, முச்சக்கர வண்டியில் இருந்த சிறுவன் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டு பேருந்தின் அடியில் சிக்கியுள்ளார்.

பேருந்து சில்லில் சிக்கி 3 வயது சிறுவன் பலி | Boy Dies After Being Crushed By Bus

விபத்தை அறியாத பேருந்தின் சாரதி பேருந்தை முன்னோக்கி செலுத்திய நிலையில், பேருந்தின் சில்லில் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலுதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.