யாழில் வீட்டிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து தாய் ஒருவரது சடலம் மீட்பு

யாழில் வீட்டிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து தாய் ஒருவரது சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.

வசாவிளான் - சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது 55) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் வீட்டிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து தாய் ஒருவரது சடலம் மீட்பு | Body Of A Mother Recovered Garden Well Home Jaffna

குறித்த பெண் அண்மைய நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்றிரவு தூக்கத்துக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை அவரை காணவில்லை.

அவரை தேடியவேளை தோட்ட கிணற்றில் சடலமாக காணப்பட்டார். சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.