ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை (7-8-1960)

ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை (7-8-1960)

கோட் டிவார் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன. இந்நாட்டின் ஆரம்ப கால வரலாறு அறியப்படவில்லையெனினும் நியோலித்திக் கலாசாரம் இங்கு இருந்திருப்பதாகத் தெரிகிறது. 1893 இல் பிரெஞ்சு காலனித்துவ நாடாக்கப்பட்டது. 1960-ல் பிரான்சிடம்

 

கோட் டிவார் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.

இந்நாட்டின் ஆரம்ப கால வரலாறு அறியப்படவில்லையெனினும் நியோலித்திக் கலாசாரம் இங்கு இருந்திருப்பதாகத் தெரிகிறது. 1893 இல் பிரெஞ்சு காலனித்துவ நாடாக்கப்பட்டது. 1960-ல் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

 


இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1933 - ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1942 - இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சாலமோன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

* 1976 - வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.

* 2006 - இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.