ஊவா மாகாணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தோல்வி
நடைபெற்று முடிந்துள்ள பொதுத்தேர்தலில் ஊவா மாகாணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் தோல்வியடைந்துள்ளனர்.
அதாவது பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ரவீந்திர சமரவீர மற்றும் லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர்.
அதேபோன்று மொனராகலை மாவட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த குமாரசிறி, சுமேதா ஜி.ஜெயசேன மற்றும் பத்ம உதயசாந்த ஆகியோர் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.