ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
ஆற்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயது மதிக்கத்தக்க ஆணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.