யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு

யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்களின் காணிகளை அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், மக்களின் காணிகளை அபகரிப்பதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.

யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு | Attempts To Seize Peoples Lands Again In Jaffna

 

இந்த அரசாங்கமும் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது.

 

அனைவரையும் ஒன்று திரளுமாறு அழைப்பு

ஆனால் இதுவரை எந்த கானிகளும் விடுவிக்கப்படவில்லை. மக்களின் காணிகளை மக்களிற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் .

யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு | Attempts To Seize Peoples Lands Again In Jaffna

இதற்காக நாளை மறுதினம் மருதங்கேணியில் அளவீடு செய்யப்படுகின்ற காணியை அளவீடு செய்யவிடாமல் தடுப்பதற்காக அனைவரையும்ஒன்று திரளுமாறு கோரிக்கை விடுத்தார்