நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு - இருவர் கைது
இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (4) குறித்த ஆலயத்தில் வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 2 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.