
கொவிட்-19: இந்தியாவில் ஒரேநாளில் 61,455பேர் பாதிப்பு- 940பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 61,455பேர் பாதிப்படைந்ததோடு, 940பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம், உலகில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட மூன்றாவது நாடாக விளங்கும் இந்தியாவில், மொத்தமாக இருபது இலட்சத்து 86ஆயிரத்து 864பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 42ஆயிரத்து 578பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது ஆறு இலட்சத்து 16ஆயிரத்து 617பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 944பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
மேலும், இதுவரை 14இலட்சத்து 27ஆயிரத்து 669பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.