தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

தேசியப் பட்டியலில் தெரிவான பிரதிநிதிகளின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னரே புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறவுள்ளது.

தேசியப் பட்டியலில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள், அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து கட்சிகளினதும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அதனை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.