யாழ். போதனாவில் யுவதி உயிரிழப்பு: மன விரக்தியில் தவறான முடிவு

யாழ். போதனாவில் யுவதி உயிரிழப்பு: மன விரக்தியில் தவறான முடிவு

யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவர் நேற்றைய தினம் (16.10.2025) உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி - ஆனந்தபுரத்தை சேர்ந்த நாகநாதன் கிருஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி மன விரக்தி காரணமாக கடந்த 14 ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்துள்ளார்.

யாழ். போதனாவில் யுவதி உயிரிழப்பு: மன விரக்தியில் தவறான முடிவு | Young Woman Death In Jaffna Teaching Hospital

இந்நிலையில் அவரை மீட்டு அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.