பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை
நாட்டில் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கையொன்றை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (17) நண்பகல் 12.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று இரவு 11.30 மணிவரையில் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு,ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னலுக்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026