சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம்

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரால் கற்பிட்டி பகுதியில் வைத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் விற்பனை செய்யும் நோக்கில் மஞ்சள் மற்றும் ஏலம் ஆகியன கொண்டு வரப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.