
மகிந்தவின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள பீஜிங்
ஸ்ரீலங்காவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மகிந் வெற்றி பெற்றமையானது சீனாவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ஹு வீ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் செயல் தூதர் ஹு வீ சனிக்கிழமை (08) மாலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) செயல் தூதர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.
சீன-இலங்கை உறவுகளை ஒரு பொதுவான அடிப்படையில் வளர்ப்பதற்கு ஒரு புதிய வழியில் உறவுகளை கட்டியெழுப்ப பொதுஜன பெரமுனவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது என்று பிரதமருக்கான வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
செய்தியை அறிவித்த தூதர் ஹு வீ, பிரதமரின் வெற்றியில் பெய்ஜிங் மகிழ்ச்சியடைவதாகவும், புதிய அரசாங்கம் வரலாற்றில் வலுவானதாக இருக்கும் என்றும் கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுக்கு மேலதிகமாக, துறைமுக நகரத்தில் பணிகளை விரைவுபடுத்தவும், குடிநீர் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒத்துழைக்கவும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் ராஜபக்ஷவை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் "நல்ல மற்றும் பழைய நண்பர்" என்று வர்ணித்த ஹூ வீ, சீனாவின் ஆதரவில் நம்பிக்கை வைக்க அழைப்பு விடுத்தார்.