கொரோனாவால் சீனர்களுக்கு வந்த மற்றுமொரு தலையிடி!

கொரோனாவால் சீனர்களுக்கு வந்த மற்றுமொரு தலையிடி!

சீனாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளமை அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பமான கொரோனா தற்போது முழு உலகையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது.

இருப்பினும் தற்போது சீனாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் சீனாவில் இந்த வைரஸ் வேகமாக பரவினாலும் பின் கட்டுப்பாட்டிற்குள் வர தொடங்கியது.

உலகளவில் கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த மக்கள் பலருக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களிடம் நடத்திய சோதனையில் 90 சதவீதமானோருக்கு நுரையீரல் சுவாச பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிக்காத ஒருவரின் சுவாச தன்மையை விட, கொரோனா பாதித்து குணமான ஒருவரின் சுவாச தன்மை மிகவும் பலவீனமாக இருப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.