ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

இம்முறை நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்கும் போது எதிர்க்கட்சியின் பின்வரிசை ஆசனங்களை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்க வேண்டியுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய, சமூக இடைவெளியை பேணி ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளதால் ஆளும் கட்சிக்கான ஆசனங்கள் போதாமையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.