பெற்ற மகளுக்கு தந்தை அரங்கேற்றிய கொடூரம், பாட்டியும் கைது ; வெளிநாடு சென்ற மனைவியை பழிவாங்க இப்படியா

பெற்ற மகளுக்கு தந்தை அரங்கேற்றிய கொடூரம், பாட்டியும் கைது ; வெளிநாடு சென்ற மனைவியை பழிவாங்க இப்படியா

வெளிநாட்டிற்கு சென்ற மனைவியை பழிவாங்க பெற்ற மகளை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட தந்தையும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோதரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்ப தனது ஐந்து வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்ற மகளுக்கு தந்தை அரங்கேற்றிய கொடூரம், பாட்டியும் கைது ; வெளிநாடு சென்ற மனைவியை பழிவாங்க இப்படியா | Father S Brutal Act Against His Own Daughter

சிறுமியை தாக்கும் காணொளியை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதன் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், சந்தேக நபரை கைது செய்யும் போது பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக சந்தேக நபரின் தாயாரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தாக்கப்பட்ட சிறுமியின் தாய் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்றிருந்ததாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாக அவர் குழந்தையை இவ்வாறு தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்கப்பட்ட சிறுமிக்கு 5 நாட்களுக்கு முன்பு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 34 வயதான சந்தேக நபரின் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.