ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராகும் கட்சி!

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராகும் கட்சி!

ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் தேர்தல்களில் அந்த கட்சியுடன் இணைந்து செயற்படத்தயார் என ஐக்கியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஹரீன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தோல்வியை கொண்டாடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களே உள்ளனர். அவர்களுக்கு தங்கள் பழைய கட்சி மீது பாசம் உள்ளது எனவும் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இரு வேறு கட்சிகளாக இருக்கும் தாங்கள் இணைந்து செயற்படுவதற்கு இதுவே சிறந்த தருணம் என குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு இணைந்து செயற்படுவதற்கான அழைப்பை விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் சில பதவிகளுக்கு தங்களுடைய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என நினைத்தால் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.