கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று..!

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று..!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 20 மில்லியனைக் கடந்துள்ளது. குறிப்பாக இதுவரையில் 20,248,413 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 738,715ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 13,112,000ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்கு அதிகளவான பாதிப்பை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் புதிதாக 49,800 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அங்கு 569 பேர் உயிரிழப்புக்களும் இடம்பெற்றிருந்தன.

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் நேற்றைய நாளில் புதிதாக 21,888 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 721ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் 53,016 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டதோடு, அங்கு 887 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.