செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 44ஆவது நாளான நேற்று (5) 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் கீழ் 491 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 489 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.