யாழில் கை விலங்குடன் தப்பி ஓடிய கைதி - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு தவறான முறைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
கை விலங்குடன் தப்பி ஓட்டம்
திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறை காவலர்களின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், 30.08.2026 அன்று 3.00 மணி அளவில் வைத்தியசாலையில் இருந்து கை விலங்குடன் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர் இளவாலை பகுதியில் ஒழிந்திருப்பதாக இளவாலை காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவர் நேற்றையதினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (01.09.2026) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.