தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்றைய தினம் கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்றைய தினம் கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.

 

தேர்தல் நடத்தப்படும் தினம் மற்றும் அதற்கான நடவடிக்கை என்பன தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 

தேர்தல் தினம் மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.

 

ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் சம்பந்தமான சமர்பணங்கள் கடந்த 10 அமர்வுகளில் முன்வைக்கப்பட்டிருந்தன.

 

இந்தநிலையில் மனுக்களை இரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

 

இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்ரிய பொதுத்தேர்தலுக்கான திகதியை இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

 

இதேவேளை, உத்தேச பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

அரசாங்க அச்சக மா அதிபர் கங்கானி லியனகே எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

 

இதன்படி, ஒரு கோடியே 69 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.