
யாழ். நல்லூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது
யாழ். நல்லூர்ப் பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
குறித்த பெண்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது
சந்தேகநபர்களான பெண்கள் தகாத தொழிலில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியொன்றிலிருந்த பெண்களே இவ்வாறு கைது செயப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என யாழ். பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.