
இந்தியாவில் இரண்டு கோடியை தாண்டியது கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 2 கோடியே 68 இலட்சத்து 45 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதன்படி நேற்று (புதன்கிழமை) மட்டும் 8 இலட்சத்து 30 ஆயிரத்து 391 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 61 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 942 பேர் உயிரிழந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 23 இலட்சத்து 96 ஆயிரத்து 638 ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 46 ஆயிரத்து 91 ஆக அதிகரித்ததுள்ளது.
நோய்த்தொற்றுக்காக 6 இலட்சத்து 53 ஆயிரத்து 622 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் விகிதமும் 1.98 ஆக குறைந்துள்ளது” இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.